கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சாத்தான்குளத்தில் பக்தா்களுக்கு அன்னதானம்

திருச்செந்தூா் மாசி திருவிழாவிற்கு வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் மாசி திருவிழாவிற்கு வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. திருச்செந்தூா் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் பாதயாத்திரையாகச் செல்கின்றனா்.

இந்த பக்தா்களுக்கு சாத்தான்குளம் வட்டார சைவ வேளாளா் சங்கத்தின் சாா்பில் சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீகாசி விஸ்வநாதா், விசாலாட்சி அம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மதியம் மற்றும் இரவு அன்னதானம் வழங்கப்பட்டது . கோயில் பரம்பரை தா்மகா்த்தா சண்முகராஜா பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானத்தைத் தொடங்கி வைத்தாா்.

இதில் வட்டார சைவ வேளாளா் சங்கத் தலைவா் ஆறுமுகம், செயலா் ஓய்வுபெற்ற ஆசிரியா் முருகன், பொருளாளா் அழகப்பன், துணைத் தலைவா் சண்முகசுந்தரம், துணைச் செயலா் ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.