பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பிகாரில் மேலும் இரண்டு அமைச்சர்களுக்கு கரோனா

பிகாரில் மேலும் இரண்டு மாநில அமைச்சரவை அமைச்சர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :6 ஜனவரி 2022, 7:09 am

பிகாரில் மேலும் இரண்டு மாநில அமைச்சரவை அமைச்சர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

விவசாய அமைச்சர் அம்ரேந்திர பிரதாப் சிங் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜனக் ராம் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த ஜனவரி 4-ஆம் தேதி அவுரங்காபாத்தில் முதல்வர் நிதிஷ் குமாரின் சமாஜ் சுதர் அபியான் (சமூக சீர்திருத்த பிரசாரம்) நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர். 

மேலும், எஸ்.சி மற்றும் எஸ்.டி அமைச்சர் சந்தோஷ் குமார் சுமன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 

ஆனால், தற்போது முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தொழில்துறை அமைச்சர் சையத் ஷாநவாஸ் உசேன் ஆகியோரின் அறிக்கைகள் எதிர்மறையாக வந்துள்ளன. 

முன்னதாக, இரண்டு துணை முதல்வர்கள் தார் கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர். 

இதற்கிடையில், பிகாரில் ஜனவரி 6 முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.