டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஒடிசாவில் 5 மாதங்களில் இல்லாத வகையில் ஒருநாள் பாதிப்பு அதிகரிப்பு

ஒடிசாவில் கடந்த 5 மாதங்களில் இல்லாத வகையில் கரோனா பாதிப்பு இன்று 1,216 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :5 ஜனவரி 2022, 6:25 am

ஒடிசாவில் கடந்த 5 மாதங்களில் இல்லாத வகையில் கரோனா பாதிப்பு இன்று 1,216 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

குர்தா மாவட்டத்தில் இரண்டு பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 8,466 ஆக உயர்ந்துள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 187 குழந்தைகள் இருப்பதாக சுகாதாரத்துறை தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து நோய்த்தொற்று எண்ணிக்கை 10.58 லட்சமாக உயர்ந்துள்ளது, இதில் 10.45 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.  

மாநிலத் தலைநகர் புவனேஸ்வர் ஒரு பகுதியாக இருக்கும் குர்தா மாவட்டத்தில் அதிகபட்சமாக 456 பேருக்கு கரோனா பாதித்துள்ளது. அதைத் தொடர்ந்து சுந்தர்கர் 166, சம்பல்பூர் 99 மற்றும் கட்டாக் ஆகிய மாவட்டத்தில் 80 ஆகவும் பதிவாகியுள்ளன.

ஒடிசாவில் தற்போது 3,981 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளன. செவ்வாயன்று மொத்தம் 68,878 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.