டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மேற்கு பாகிஸ்தானில் கனமழை: 300 வீடுகள் இடிந்து சேதம்

மேற்கு பாகிஸ்தானில் கனமழை மற்றும் பனிப்பொழி காரணமாக சுமார் 300 -க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளன. 

News image
Updated On :5 ஜனவரி 2022, 11:08 am

மேற்கு பாகிஸ்தானில் கனமழை மற்றும் பனிப்பொழி காரணமாக சுமார் 300 -க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளன. 

திங்கள்கிழமை இரவு பலுசிஸ்தான் மாகாணத்தை சூறாவளி புயல் தாக்கியது. இதனால், தாழ்வுப் பகுதியான மக்ரான் மிகவும் பாதிக்கப்பட்டது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 20 மணி நேரத்தில் 10 செ.மீ மழைப் பதிவானது. குவாதர் பகுதியில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. 

கனமழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவசர மீட்பு நடவடிக்கைகளுக்கு ராணுவத்தை அனுப்பக்கோரி அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர். 

கராச்சியுடன் இணைக்கும் மக்ரான் கடற்கரை நெடுஞ்சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. பல வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. 

குவாதர் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே உள்ள மலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் பதிவாகவில்லை. 

மேலும், இந்த வார இறுதி வரை மழை பெய்யும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.