தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜார்க்கண்டில் வனத்தைக் காக்க அணி திரண்ட பெண்கள்

வனத்தைப் பாதுகாப்போம்.. இந்த ஒற்றைச் சொல்லுக்கு உயிரூட்டி வருகிறார் 100 வயதைத் தொடும் ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி.

News image

ஜார்க்கண்டில் வனத்தைக் காக்க அணி திரண்ட பெண்கள்

Updated On :14 பிப்ரவரி 2022, 11:38 am


ராஞ்சி: வனத்தைப் பாதுகாப்போம்.. இந்த ஒற்றைச் சொல்லுக்கு உயிரூட்டி வருகிறார் 100 வயதைத் தொடும் ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி.

தனது காலம் முடிந்துவிட்டது. இனி என்ன செய்யப் போகிறோம் என்று நினைக்காமல், சுமார் 9 ஏக்கர் வனப்பகுதியை தனது போராட்டத்தால் மீட்டும், இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, தனது புரட்சிகர போராட்டத்துக்கு, அணி திரட்டியும் வருகிறார்.

வனத்தைக் காப்போம் திட்டம் என்ற பெயரில், 7 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 104 பெண்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் வெறும் போராட்டத்தை மட்டும் முன்னெடுக்கவில்லை. இவர்களுக்குள் நான்கு பிரிவாக பிரிந்து, காலை 6 - 9 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் என வனப்பகுதியைச் சுற்றிலும் காவல் காக்கிறார்கள். கையில் கொம்பு, குச்சிகளுடன் வனப்பகுதியிலிருக்கும் முக்கிய மரங்களை கணக்கெடுத்தும் வைத்துக் கொள்கிறார்கள்.

யாராவது மரம் வெட்டுவதைப் பார்த்தால் போதும், இந்தக் குழுவினர் அவர்களைச் சுற்றி வைத்து அபராதம் வசூலித்துவிடுகிறார்கள். அபராதம் எவ்வளவு தெரியுமா? ரூ.5,000. இதனால், அவர்களது பகுதியில் மரம் வெட்டுவது குறைந்து, வனப்பகுதியின் பரப்பளவும் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்ல, தலா 25 பேர் ஒவ்வொரு ஷிப்டிலும் வனப்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள்.இந்தப் பணிக்கு வரத் வரத் தவறினால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை கொண்டு வனப்பகுதியில் அரிய வகை மரங்கள் நட்டு பராமரிக்க பயன்படுத்துகிறார்கள் இந்த மகளிர் குழுவினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.