சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

உண்மையிலேயே நாட்டில் கரோனா பரவல் குறைந்துவருகிறதா?

கேரளம், மிசோரம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும் கரோனா உறுதியாகும் விகிதம் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

நாட்டில் கரோனா பரவல் குறைந்துவருகிறதா?

Updated On :10 பிப்ரவரி 2022, 12:38 pm


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா பரவல் நம்பிக்கையளிக்கும் வகையில் இருப்பதாகவும், கேரளம், மிசோரம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும் கரோனா உறுதியாகும் விகிதம் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அனைத்து மாநிலங்களின் புள்ளிவிவரங்களையும் ஆய்வு செய்யும்போது, சமார் 40 மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து வாராந்திர கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. அந்த மாவட்டங்களி, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் 141 மாவட்டங்களில் கரோனா உறுதியாகும் விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது, 160 மாவட்டங்களில் 5 - 10 சதவீதத்துக்குள் இருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே கேரளம், மகாராஷ்டிரம், தமிழகம், கர்நாடகத்தில் 50 ஆயிரத்தக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர். கேரளத்தில் கரோனா உறுதியாகும் விகிதம் 29.57 சதவீதமாக உள்ளது.  இதுபோல, மிசோரம், இமாசலம், அருணாசலத்திலும் கரோனா உறுதியாகும் விகிதம் கவலைதரும் அளவிலேயே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.