தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

5-12 வயதுக்குட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி தேவையில்லை: டாக்டர் ககன்தீப் காங்

ஐந்து முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி தேவையில்லை என்று தொற்றுநோயியல் துறை நிபுணர் டாக்டர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.

News image

5-12 வயதுக்குட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி தேவையில்லை: டாக்டர் ககன்தீப் காங்

Updated On :10 பிப்ரவரி 2022, 12:38 pm


புது தில்லி: ஐந்து முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி தேவையில்லை என்றும், அதன் தேவையை உறுதி செய்யும் எந்த தரவுகளும் இல்லை என்றும் இந்தியாவின் புகழ்பெற்ற தொற்றுநோயியல் துறை நிபுணர் டாக்டர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.

வேலூரில் அமைந்துள்ள சிஎம்சி மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் காங், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு அவர் அளித்த பேட்டியில், டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும், 5 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டன.

"ஐந்து முதல் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி எதுவும் தேவையில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பான், நீண்ட நாள்களுக்கு கரோனாவிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் தடுப்பூசியை நாம் கண்டறியும் வரை, 15 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியமில்லை. ஆனால், அதுபோன்றதொரு தடுப்பூசி இதுவரை கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

எனது குழந்தைக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வந்தால், அது எனக்கு கவலைதரும் விஷயம்தான். அதனை உறுதிசெய்யும் தரவுகள் எதுவும் இல்லை என்கிறார் அவர்.

இந்தியாவில், இதுவரை 15 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிபுணர்களின் கருத்துகள் கோரப்பட்டுள்ளது. 

மேலும், காங் கூறுகையில், குழந்தைகளுக்கு பாதிப்புக் குறைவு. மேலும், குழந்தைகளுக்கு தரமான முகக்கவசங்கள் வழங்கப்பட்டால், தொற்று பாதிப்பு அபாயம் மேலும் குறையும். பள்ளிகள் நல்ல காற்றோட்டமானதாக அமைந்தால் அச்சப்பட வேண்டாம். ஒரு வேளை, இணை நோய் ஏதேனும் இருந்தால், அந்தக் குழந்தைகளுக்கு மட்டும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படலாம் என்கிறார்.

அதேவேளையில், 15 - 18 வயதுக்குட்பட்ட 1 கோடி சிறார்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.