புது தில்லி: தில்லியில் இருக்கும் மிகவும் புகழ்பெற்ற நட்சத்திர விடுதியான தி அஷோக் ஓட்டலை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தில்லியின் இதயத் துடிப்பாக விளங்கும் லுட்யென்ஸ் பகுதியில், அதுவும் குறிப்பாக பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில்தான் இந்த தி அஷோக் ஓட்டல் அமைந்துள்ளது.
இதையும் படிக்க.. தடாலடியாக இப்படிச் செய்ய வேண்டாம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
மத்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையினர், 25 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த மிகப்பெரிய சொத்தை, சுமார் 90 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மத்திய அமைச்சரவையிடம் ஒப்புதல் பெறுவதற்கான முயற்சியை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குத்தகைக்கு வரவிருப்பதாகக் கூறப்படும் இந்த ஒட்டுமொத்த சொத்தில், 300 விடுதி அறைகள், ஊழியர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பு, வணிக வளாகம், தனித்துவம் மிக்க மிகப்பெரிய உணவகம், கேளிக்கை விடுதி மற்றும் சுகாதாரக் கூடம் ஆகியவை அடங்கும்.
தி அஷோக் ஓட்டலை குத்தகை விற்பனை செய்வதன் மூலம், மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அமைச்சகத்தின் அறிக்கை தயாரிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை பெற்று பிறகு பூர்வாங்கப் பணிகள் தொடங்கி, இந்த ஆண்டுக்குள் தி அஷோக் ஓட்டல் குத்தகைக்கு விடப்படும் என்றும் அந்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த ஓட்டலை குத்தகைக்கு எடுக்கப்போக்கும் தொழிலதிபர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதுவரை புது தில்லியில் முகேஷ் அம்பானிக்கு என்று சொந்தமாக எந்த நட்சத்திர ஓட்டலும் இல்லை. ஏற்கனவே, கிளாரிட்ஜ் ஓட்டலிலிருந்து நந்தாஸ் மட்டும் பிரித்து வாங்கிக் கொள்ள முகேஷ் அம்பானி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
அதன்பிறகு, மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட, கிழக்கு இந்திய ஓட்டல்ஸ் லிமிடட் நிறுவனம் நடத்தி வந்த ஓட்டல் ஓபராயில் முகேஷ் அம்பானி முதலீடு செய்தார். தற்போது, அவரது மனைவி நீதா, அதன் இயக்குநராக உள்ளார். ஆனால், அந்த ஓட்டலின் ஒட்டுமொத்த நிர்வாகமும் பிரித்விராஜ் சிங் பிகி ஓபெராய் வசமே உள்ளது. எனவே, ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்பும் தங்களிடமே இருக்கும் வகையில் ஒரு நட்சத்திர ஓட்டலை வாங்க முகேஷ் அம்பானி திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு தி அஷோக் நல்வாய்ப்பாக உள்ளதாகவும் கருதப்படுகிறது.

ஏற்கனவே, வாஜ்பாயி தலைமையில் மத்திய அரசு இருந்த போதே, அவரது மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா இந்த ஓட்டலைக் கைப்பற்ற திட்டமிட்டதாகவும், ஆனால், அப்போது மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த ஜக்மோகன், அதற்கு முட்டுக்கட்டை போட்டு, ஓட்டலை விற்பனை செய்ய மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் உள்ளன.
மத்திய அரசுக்கு லாபமீட்டித் தரும் எந்த நிறுவனத்தையும் விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசுக்கு ஜக்மோகன் கூறிவிட்டார். அதேவேளையில், தி அஷோக் ஓட்டல் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கவும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தி அஷோக் ஓட்டல் சில கோடிகள் வருவாயை அதிகரித்துக் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


