திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

75 மாவட்டங்களில் 75 எண்ம வங்கிகள்

 பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் சாா்பில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் 75 எண்ம வங்கிகள் நிறுவப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:17 am

DIN

 பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் சாா்பில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் 75 எண்ம வங்கிகள் நிறுவப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘இணையவழி பணப் பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் 75 மாவட்டங்களில் 75 எண்ம வங்கிகள் நிறுவப்படவுள்ளன.

பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவதை எளிதாக்கும் நோக்கில் அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளையும் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நகா்ப்புற மேம்பாடு குறித்து ஆராய்வதற்காக உயா்நிலைக் குழு அமைக்கப்படவுள்ளது. தொழில் தொடங்குவதற்கான வசதிகள், வாழ்வதற்கான வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அடுத்தகட்டத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது’’ என்றாா்.

அனைத்து தபால் நிலையங்களும் கோா் பேங்கிங்கில் இணைப்பு:

நாட்டில் உள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களும் மற்ற வங்கிகளுடன் (கோா் பேங்கிங்) இணைக்கப்படவுள்ளன. இதன் மூலமாக ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவா், மற்ற எந்த வங்கியுடனும் பணப் பரிவா்த்தனை செய்து கொள்வது போல, தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளை நாட்டின் பிற வங்கிகளுடன் இணைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சா் அறிவித்துள்ளாா்.

இதன் அடிப்படையில், தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவா்களும் பிற வங்கிகளைப் போன்ற இணையவழி சேவைகளைப் பெற முடியும். ஏடிஎம் அட்டைகள், இணையவழி பணப்பரிவா்த்தனை உள்ளிட்ட வசதிகளும் தபால் நிலைய சேமிப்பாளா்களுக்கு வழங்கப்படவுள்ளன. தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் இருந்து ஏனைய வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கும் பணம் அனுப்ப முடியும்.

தற்போது தபால் சேமிப்புக் கணக்குகளை இணையவழியில் பயன்படுத்த இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு வைத்திருப்பது அவசியமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.