தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

புத்தாண்டு: மஹாகாலேஷ்வர் கோயிலுக்கு 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு! 

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜையினில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலுக்கு புத்தாண்டு வழிபாட்டுக்குக் குறைந்தது 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
Updated On :31 டிசம்பர் 2022, 9:27 am

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜையினில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலுக்கு புத்தாண்டு வழிபாட்டுக்கு குறைந்தது 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான க்ஷிப்ரா நதிக்கு அருகில் அமைந்துள்ள மஹாகாலேஷ்வர் கோயிலில் வருடத்தின் முதல் நாளை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருவதுண்டு. இந்நிலையில், இந்தாண்டு புத்தாண்டு  ஞாயிற்றுக்கிழமையில் வந்துள்ளதால், வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கோயிலுக்கு வரும் பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கோயிலைச் சுற்றித் தடுப்புகள் போடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஆறு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அவசரநிலையைச் சமாளிக்க மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடலை மாவினால் ஆன லட்டு பிரசாதம் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. 

கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும். காலை 6 மணி வரை பஸ்ம ஆரத்தி நடைபெறும். இரவு 10 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். வழிபாட்டுடன் இரவு 11 மணிக்கு மூடப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.