தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அடுத்த 40 நாள்களில்.. இந்தியாவில் கரோனா அதிகரிக்குமாம்: அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் அடுத்த 40 நாள்களுக்கு அதாவது முக்கியமாக ஜனவரி மாதத்தில் கரோனாவின் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

News image

அடுத்த 40 நாள்களில்.. இந்தியாவில் கரோனா அதிகரிக்குமாம்: அதிர்ச்சித் தகவல்!

Updated On :28 டிசம்பர் 2022, 12:53 pm

இந்தியாவில் அடுத்த 40 நாள்களுக்கு அதாவது முக்கியமாக ஜனவரி மாதத்தில் கரோனாவின் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக கிழக்கு ஆசியாவை கரோனா தாக்கிய 30-35 நாள்களுக்குப் பிறகு கரோனாவின் புதிய அலை இந்தியாவைத் தாக்கத் தொடங்கியது. எனவே மக்கள் இந்த நாற்பது நாள்களும்  மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் கூறுகையில், 

இந்தியாவில் நோய்த் தொற்றின் தீவிரம் குறைவாக இருப்பதாகவும், உயிரிழப்பு, மருத்துவமனை அனுமதி பெறுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதாகவும், நிலைமை தீவிரமடைவில்லை என்றும் கூறியுள்ளது. 

சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், பேங்காக் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் வெளிநாடுகளில் இருந்து வரும்  2 சதவீத சர்வதேசப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்த அரசு கட்டாயமாக்கியுள்ளது. 

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களில் வந்த 6,000 சர்வதேசப் பயணிகளிடம் பரிசோதனை செய்ததில் 39 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

மேலும், வெளி நாடுகளில் இருந்து வரும் சர்வதேசப் பயணிகளுக்கு ஏர் சுவிதா படிவங்களை நிரப்புவதும், 72 மணி நேரத்துக்கு முன்னதாக எடுத்த ஆர்டி-பிசிஆர் சோதனையும் அடுத்த வாரம் முதல் கட்டாயமாக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், எந்தவொரு நிகழ்விற்கும் தயாராகுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சுகாதார அமைச்சர் மாண்டவியா கரோனா நிலைமையைச் சமாளிக்க நாட்டின் தாயார் நிலையை மதிப்பீடு செய்யக் கூட்டம் நடத்தி ஆலோசித்துள்ளனர். 

கரோனா நோய்த் தொற்றின் எந்தவொரு வேகத்தையும் சமாளிக்கவும், தயார்நிலையைச் சரிபார்க்கவும் இந்தியா முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில்  செவ்வாய்க்கிழமை ஒத்திகை நடத்தப்பட்டன. 

பல நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாடு எச்சரிக்கையாகவும், தயாராகவும் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

சமீபத்திய அதிகரிப்பு கரோனாவின் ஒருவகையான ஒமைக்ரானின் துணை மாறுபாடு ஆகும். பிஎப்-7 வகை கரோனாவின் தாக்கம் கொண்ட ஒரு நபரின் மூலம் 16 பேரை பாதிப்படையச் செய்யும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.