தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிரான காங்கிரஸின் போராட்டம் தொடரும்: கெலாட்

ஜனநாயகத்தையும், நாட்டின் அரசியலமைப்பையும் பலவீனப்படுத்தும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிரான காங்கிரஸின் போராட்டம் தொடரும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். 

News image

பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிரான காங்கிரஸின் போராட்டம் தொடரும்: கெலாட்

Updated On :28 டிசம்பர் 2022, 7:45 am

ஜனநாயகத்தையும், நாட்டின் அரசியலமைப்பையும் பலவீனப்படுத்தும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிரான காங்கிரஸின் போராட்டம் தொடரும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். 

காங்கிரஸின் நிறுவன தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், 

காங்கிரஸ் கட்சியின் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கெலாட், காங்கிரஸ் நிறுவன தினத்தை முன்னிட்டு அனைத்து காங்கிரஸ் கட்சியினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று நமக்குப் பெருமையும், புகழும் நிறைந்த நாள் என்றார். 

கட்சி நிறுவப்பட்டதிலிருந்து நீண்ட தூரம் பயணித்துள்ளோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதன் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். 

எங்கள் போராட்டம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிரானது என்று ராகுல் காந்தி கூறினார். அது தொடரும். அரசியலமைப்பைப் பாதுகாக்க எங்களால் முடியும்.

அவர்கள் அரசியலமைப்பை அழித்து ஜனநாயகத்தின் வேர்களைப் பலவீனப்படுத்துகிறார்கள், அதை நாடு பொறுத்துக்கொள்ளாது.

கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்றதைக் குறிப்பிட்டு கெலாட், 50 ஆண்டுகளில் முதன்முறையாக தலித் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் எங்கள் கட்சியின் தலைவரானார். கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ட்விட்டர் பக்கத்தில், 

இந்தியத் தேசிய காங்கிரஸின் நிறுவன தினத்தை முன்னிட்டு அனைத்து அலுவலக பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நல்வாழ்த்துகள். ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொது சேவையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.