2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஒடிசாவில் குறு, சிறு, நடுத்தர தொழில் பூங்காக்களை அமைக்க அரசுத் திட்டம்

ஒடிசா மாநிலத்தின் 30 மாவட்டங்களிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பூங்காக்களை(எம்எஸ்எம்இ) அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:49 pm

PTI

ஒடிசா மாநிலத்தின் 30 மாவட்டங்களிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பூங்காக்களை(எம்எஸ்எம்இ) அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக தலைமைச் செயலர் மொகபத்ரா கூறுகையில், 

நிலம், மின்சாரம் மற்றும் நீர் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு ஆதரவையும் குறு சிறு, நடுத்தர தொழில் பூங்காக்கள் பெரும் என்று அவர் கூறினார்.  

ஒடிசா தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மாவட்டங்களில் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று ஒடிசா சட்டப்பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட புரோபேக் ஒடிசாவின் நிறைவுக் கூட்டத்தில் அவர் கூறினார். 

கடந்த சில ஆண்டுகளில் வங்கிகளால் வழங்கப்படும் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான நிதியில் 30-40 சதவீதம் வளர்ச்சியைக் கண்டோம். இதுதொடர்பாக வங்கியாளர்களுடன் முதல்வர் நவீன் பட்நாயக் இரண்டு சுற்றுச் சந்திப்புகளை நடத்தியுள்ளார். வங்கிகள் ஒத்துழைக்கவில்லை எனத் தொழில்முனைவோர் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த மொஹபத்ரா கூறினார். 

இதுகுறித்து ஒடிசா தொழில்துறை அமைச்சர் பி.கே.தேப் கூறுகையில்,  

இளைய தலைமுறையினர் சவால்களை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அரசியின் ஆதரவை மட்டும் நம்பியிருக்கக் கூடாது. தொழில்களுக்கான சிறந்த உள்கட்டமைப்பை ஒடிசா பெற்றுள்ளது. ஒடிசாவிற்கு பெரிய மற்றும் கனரக தொழிற்சாலைகள் வருகிறது, ஆனால் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மாநிலத்திற்கு மிகவும் அவசியம்.  தொழில் அமைப்புகள் முன்வந்து சிறந்த தொழில் மயமாக்கலுக்கான கொள்கை மாற்றத்தைப் பரிந்துரைக்க வேண்டும் என்றார்.

மாநில நிதிச் செயலர் விஷால் தேவ், இந்த துறை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக இருப்பதால், குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கு நிதி கிடைப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளைக் கேட்டுக் கொண்டார். ஆண்டு இறுதிக்குள் அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் வர்த்தக தள்ளுபடி தளங்களில் சேர்ப்பது எங்கள் திட்டம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.