தேசியப் பங்குச் சந்தையில் பணியாற்றும் அலுவலா்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், பங்குச் சந்தையின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தேசிய பங்குச் சந்தையில் முறைகேடுகள் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் சித்ரா ராமகிருஷணா கைது செய்யப்பட்டார்.
இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டேவின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்று சித்ரா ராமகிருஷ்ணாவின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஆசிரியர் இல்லா கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: தமிழகத்துக்கு முதலிடம்
ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, விசாரணையில், இந்த முறைகேடுகளில் சித்ரா ராமகிருஷ்ணா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டிருப்பதும், நன்கு தெரிந்தே முறைகேட்டுக்கு உதவியிருப்பதும், அனைத்து முறைகேடுகளிலும் இவர் உடந்தையாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் கணினி சேமிப்பகத்தின் கோ-லொகேஷன் வசதியை பங்குத் தரகு நிறுவனங்களுக்கு அளித்தது தொடா்பான வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா, தேசிய பங்குச் சந்தை குழும முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோா் கைது சிபிஐயால் செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டே தொடங்கிய ஐ-செக் சா்வீஸ் நிறுவனம், தேசியப் பங்குச் சந்தை அலுவலா்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டதாகப் புகாா் எழுந்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் உடந்தையுடன் இந்த மோசடி நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியில் நடந்த நிதி முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தனியே வழக்குப் பதிவு செய்து, அவரிடம் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தியது.
இதற்கிடையே தொலைபேசி ஒட்டுக்கேட்பில் நடந்த பணமோசடி தொடா்பாக, மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டே மீது அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

உதயநிதிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை பதில் மனு தாக்கல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


