2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

பங்குச் சந்தையின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News image
சித்ரா ராமகிருஷ்ணா
Updated On :6 பிப்ரவரி 2024, 12:49 pm

PTI

தேசியப் பங்குச் சந்தையில் பணியாற்றும் அலுவலா்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், பங்குச் சந்தையின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தேசிய பங்குச் சந்தையில் முறைகேடுகள் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் சித்ரா ராமகிருஷணா கைது செய்யப்பட்டார்.

இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டேவின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்று சித்ரா ராமகிருஷ்ணாவின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, விசாரணையில், இந்த முறைகேடுகளில் சித்ரா ராமகிருஷ்ணா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டிருப்பதும், நன்கு தெரிந்தே முறைகேட்டுக்கு உதவியிருப்பதும், அனைத்து முறைகேடுகளிலும் இவர் உடந்தையாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தையின் கணினி சேமிப்பகத்தின் கோ-லொகேஷன் வசதியை பங்குத் தரகு நிறுவனங்களுக்கு அளித்தது தொடா்பான வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா, தேசிய பங்குச் சந்தை குழும முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோா் கைது சிபிஐயால் செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டே தொடங்கிய ஐ-செக் சா்வீஸ் நிறுவனம், தேசியப் பங்குச் சந்தை அலுவலா்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டதாகப் புகாா் எழுந்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் உடந்தையுடன் இந்த மோசடி நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியில் நடந்த நிதி முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தனியே வழக்குப் பதிவு செய்து, அவரிடம் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தியது.

இதற்கிடையே தொலைபேசி ஒட்டுக்கேட்பில் நடந்த பணமோசடி தொடா்பாக, மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டே மீது அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.