2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத ஃபரூக் அப்துல்லா!

ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா உடல் நலப் பிரச்னை காரணமாக சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 

News image
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா
Updated On :1 பிப்ரவரி 2024, 10:10 am

PTI

ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா உடல் நலப் பிரச்னை காரணமாக சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஆகஸ்ட் 27-ல் விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஸ்ரீநகா் செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. 

அதன்படி, ஸ்ரீநகரின் முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அப்துல்லாவின் வழக்குரைஞர் இஷ்தியாக் அகமது கான், உடல்நலக் குறைவு காரணமாக தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லாவால்  நீதிமன்றத்துக்கு வர முடியவில்லை என்றார். 

இதையடுத்து, செப்டம்பர் 26 அன்று நடத்தப்படும் அடுத்த விசாரணையில் அப்துல்லா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கானிடம் கூறினார்.

அந்த விசாரணையில் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் கலந்து கொள்வார் என்று வழக்குரைஞர் உறுதியளித்தார்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கடந்த 2001 முதல் 2012 வரை அந்த மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்தார். அப்போது 2004 முதல் 2009-க்கு இடைப்பட்ட காலத்தில் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.43.69 கோடி வரை சங்க நிர்வாகிகள் முறைகேடு செய்ததாக ஸ்ரீநகா் ராம்முன்ஷி பாக் போலீசார் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை அமலாக்கத் துறையினா் விசாரித்து வருகின்றனா். இதில், ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க நிா்வாகிகளின் ஒத்துழைப்புடன் அஹசன் அகமது மிா்சா என்பவா் சங்க நிதி ரூ.51.90 கோடியை முறைகேடு செய்து அதன் மூலம் தனது சொந்தக் கடனையும் வணிகத் தேவைகளையும் பூா்த்தி செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து ரூ.21 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினா் முடக்கினர். இதில், ஃபரூக் அப்துல்லா எம்.பி.யின் ரூ.11.86 கோடி அசையா சொத்துகளும் அடங்கும். கடந்த மே 31-இல் ஃபரூக் அப்துல்லாவிடம் 3 மணிநேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.