தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கொலைகார கும்பல் போல நடந்து கொள்ளும் பாஜக: மணீஷ் சிசோடியா

மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்காக மத்தியில் ஆளும் பாஜக கொலைகார கும்பல் போல செயல்படுவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:10 am

DIN

மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்காக மத்தியில் ஆளும் பாஜக கொலைகார கும்பல் போல செயல்படுவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்குகள் முற்றிலும் போலியானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவையில் மணீஷ் சிசோடியா பேசியதாவது: “ தில்லி அரசின் கலால் திட்டத்தில் எந்த ஒரு ஊழலும் இல்லை. இந்த கலால் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை நிரூபிக்க சிபிஐ தரப்பில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. உலகம் முழுவதும் பாராட்டப்படும் தில்லி அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த சிபிஐ சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மற்றவர்கள் செய்யும் நல்ல செயல்களைப் பார்த்து பிரதமர் பாதுகாப்பின்றி உணர்கிறார். அவரைவிட பாதுகாப்பின்றி உணரும் ஒருவரை நான் பார்த்ததில்லை.

பிரதமர் அறிமுகப்படுத்தும் நல்ல திட்டங்களை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வரவேற்கிறார். ஆனால். பிரதமரோ தில்லி அரசினால் கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராகவே உள்ளார். சிபிஐ நடத்திய 14 மணி நேர சோதனையில் என்னுடைய உடைகள் மற்றும் என்னுடைய குழந்தைகளின் உடைகளும் ஆராயப்பட்டன. ஆனால், அவர்களுக்கு அதிலிருந்து ஒன்றும் கிடைக்கவில்லை. பாஜக மற்ற மாநில அரசுகளை கவிழ்ப்பதில் கொலைகார கும்பல் போல செயல்பட்டு வருகிறது. அவர்கள் மாநில அரசுகளை திட்டமிட்டு கொல்ல நினைக்கும் திட்டத்தினை கைவிட்டு பள்ளி மற்றும் மருத்துவமனைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினால் நன்றாக இருக்கும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.