டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் ராஜிநாமா

இளம் காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:09 am

ANI

இளம் காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

ஷெர்கில் தனது ராஜிநாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.

இந்தியத் தேசிய காங்கிரஸின் தற்போதைய முடிவெடுப்பவர்களின் சித்தாந்தமும் பார்வையும் இனி இளைஞர்கள் மற்றும் நவீன இந்தியாவின் எண்ணங்களுடன் ஒத்துபோவாததே முதன்மையான காரணம் என்று ஷெர்கில் தனது கடிதத்தில் கூறினார். 

மேலும், முடிவெடுப்பது இனி பொதுமக்கள் மற்றும் நாட்டின் நலனுக்கானது அல்ல என்று கூறுவது எனக்கு வேதனை அளிக்கிறது. இது தனிமனிதர்களின் சுயநலன்களால் பாதிக்கப்படுவதும், நிதர்சனத்தைத் தொடர்ந்து புறக்கணிப்பதும் ஆகும். எனவே, இதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது தொடர்ந்து பணியாற்றவோ முடியாது என்று அவர் கூறினார். 

தொழில் ரீதியாக ஷெர்கில் ஒரு வழக்குரைஞராகவும் இளம் காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவர்களின் ஒருவர். இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர் ஆவார். 

இவரின் ராஜிநாமா அவரது நம்பிக்கைக்குரிய கட்சித் தலைவர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.