டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஜம்முவில் வைஷ்ணவி தேவி கோயிலில் மீண்டும் பக்தர்கள் அனுமதி

ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

News image
ஜம்முவில் வைஷ்ணவி தேவி கோயிலில் மீண்டும் பக்தர்கள் அனுமதி
Updated On :1 பிப்ரவரி 2024, 10:07 am

ANI


ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மழை நின்று, வெள்ளம் குறைந்த நிலையில், சனிக்கிழமை, வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவில் இருந்து 50 கிலோமீட்டா் தொலைவில் உள்ள திரிகுடா மலையின் உச்சியில் அமைந்துள்ளது வைஷ்ணவி தேவி கோயில். நேற்று இப்பகுதியில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதால் பக்தர்களின் பாதுகாப்புக்காக கத்ரா பகுதியிலிருந்து செல்லும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சிஆர்பிஎஃப் வீரல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இன்று காலை மழை குறைந்ததையடுத்து, மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.