ஜம்முவில் வைஷ்ணவி தேவி கோயிலில் மீண்டும் பக்தர்கள் அனுமதி
ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.


ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மழை நின்று, வெள்ளம் குறைந்த நிலையில், சனிக்கிழமை, வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் இருந்து 50 கிலோமீட்டா் தொலைவில் உள்ள திரிகுடா மலையின் உச்சியில் அமைந்துள்ளது வைஷ்ணவி தேவி கோயில். நேற்று இப்பகுதியில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதால் பக்தர்களின் பாதுகாப்புக்காக கத்ரா பகுதியிலிருந்து செல்லும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சிஆர்பிஎஃப் வீரல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இன்று காலை மழை குறைந்ததையடுத்து, மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...