தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கும் கட்டணம்? கருத்துக் கேட்கிறது ஆர்பிஐ

எண்ம (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனை முறையில், பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி, இது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளத

News image

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கும் கட்டணம்? கருத்துக் கேட்கிறது ஆர்பிஐ

Updated On :18 ஆகஸ்ட் 2022, 10:06 am

மும்பை: எண்ம (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனை முறையில், பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி, இது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது.

ஆர்பிஐ இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட நடைமுறைகளைக் கொண்டு வருவது குறித்து மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து மக்கள் தங்களது ஆலோசனைகள், உரிய கருத்துகளை 2022ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதிக்குள், மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, எண்ம முறையில் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து, தற்போது சிறிய நடைபாதைக் கடைகளில் கூட யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி வந்துவிட்டது. இந்த நிலையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் எண்ம பணப்பரிவர்த்தனை முறைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தில் ஆர்பிஐ உள்ளது.

பணப்பரிவர்த்தனை முறைகளை ஒழுங்குபடுத்துவது, அதிலிருக்கும் குறைபாடுகளைப் போக்குவது, பணப்பரிவர்த்தனை முறையில் வருவாயைப் பெருக்குவது உள்ளிட்ட விஷயங்களிலும் ஆர்பிஐ கவனம் செலுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை முறையில் பல்வேறு இடைத்தரகர்கள் இருந்தாலும் கூட, இந்த பணப்பரிவர்த்தனை சங்கிலி தொடரில் பயனாளர்களின் புகார்கள் பெரும்பாலும் நேரடியான கட்டணங்கள் தொடர்பானதாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.