தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ராஜ்கோட்டில் அதிர்ச்சி: 4 ஆயிரம் லிட்டர் கலப்பட பால் பறிமுதல்!

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள சோதனைச் சாவடியில் 4 ஆயிரம் லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2022, 6:54 am

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள சோதனைச் சாவடியில் 4 ஆயிரம் லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ராஜ்கோட் துணை ஆணையர் பிரவீன் குமார் மீனா கூறுகையில், 

வாகன சோதனையின் போது ஒரு டிரக்கில் சல்பேட் பாஸ்பேட் மற்றும் கார்பனேட் எண்ணெய்கள் போன்ற ரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது. 

தகவலின்படி, கலப்பட பால் வணிகம் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் பின்னணியில் பெரிய இணைப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 4 மாதங்களாகக் கலப்பட பால் விநியோகம் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாகத் தொழிற்சாலையின் இருப்பிடத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம். 

முன்னதாக செவ்வாயன்று, நாடு முழுவதும் உள்ள முக்கிய பால் விற்பனை நிலையங்களில் பால் விலையை உயர்த்தின. விலை உயர்வுக்கான முக்கியக் காரணம் உள்ளீட்டுச் செலவு அதிகரிப்பு எனக் கூறப்படுகிறது. 

அமுல் மற்றும் மதர் டெய்ரி ஆகிய இரண்டும் ரூ.2 உயர்த்தியுள்ளன. இந்த விலையுயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

இந்நிலையில் கலப்பட பால் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.