ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

ஆளுநர் தமிழிசையின் விருந்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தெலங்கானா முதல்வர்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தேநீர் விருந்தைத்  தொடர்ந்து இரண்டாவது முறையாகப் புறக்கணித்தார் முதல்வர் சந்திரசேகர் ராவ்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:04 am

DIN

சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தேநீர் விருந்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தார். இந்தத் தொடர் புறக்கணிப்பு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து 76ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விழாவானது மிக பிரம்மாண்டமாக நேற்று கொண்டாடப்பட்டது.

இதற்கிடையே, ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் மாலையில் மாநில ஆளுநர்களால், அந்தந்த மாநிலங்களில் உள்ள முதல்வர், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் உள்பட முக்கியமான பலருக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

அந்த வகையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் பங்கேற்காமல் முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முன்னதாக, தெலங்கானாவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கொடியேற்றிய பின் பேசிய முதல்வர் சந்திரசேகர் ராவ், மத்திய, மாநில அரசுகளுக்கு சமமான அதிகாரம் அளிக்கும் வகையில் கூட்டாட்சி அமைப்பை அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கினார்கள். ஆனால் தற்போதைய மத்திய அரசு இந்த கூட்டாட்சி உணர்வை பலவீனப்படுத்தி வருகிறது. மேலும், மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றவும் முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

கடந்த குடியரசு நாளன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்திலும் முதல்வர் சந்திரசேகர் கலந்து கொள்ளவில்லை. ஆளுநர் தொடர்பான எந்த நிகழ்விலும் பங்கேற்காமல் புறக்கணித்துவரும் முதல்வர் சந்திரசேகர் ராவ், பிரதமர் நரேந்திர மோடி வந்தபோதுகூட சந்திப்பைத் தவிர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.