பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

மகாராஷ்டிர அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்கள் ஒதுக்கப்படும்: பட்னாவிஸ் 

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்கள் ஒதுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சனிக்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :13 ஆகஸ்ட் 2022, 7:13 am

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்கள் ஒதுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சனிக்கிழமை தெரிவித்தார். 

பட்னாவிஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

பாஜக மகாராஷ்டிர பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட சந்திரசேகர் பவான்குலேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

புதிய அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்கள் ஒதுக்கப்படும் எனக் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தார்.  

முதல்வராகப் பதவியேற்ற 41 நாள்களுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை விரிவாக்கப்பட்டு, இருகட்சிகளையும் சேர்ந்த தலா 9 அமைச்சர்கள் என 18 பேர் பதவியேற்றனர்.

மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பயிர் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையை,  அரசு விரைவில் வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார். 

ஜூலை மாதத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்க மகாராஷ்டிர அரசு புதன்கிழமை முடிவு செய்துள்ளது.

தற்போதைய தேசிய பேரிடர் நிவாரண நிதி(என்டிஆர்எப் ) விதிமுறைகளின்படி, ஒரு விவசாயி ஹெக்டேர் ஒன்றுக்கு 6,800 ரூபாய் இழப்பீடாகப் பெறுகிறார். இந்தத் தொகையை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளோம் என்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.