தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா அதிகரிப்பால் பீதியடையத் தேவையில்லை: கேஜரிவால் 

தற்போது பெரும்பாலான தொற்று லேசானதாக இருப்பதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :9 ஆகஸ்ட் 2022, 12:33 pm

புது தில்லி: கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது பெரும்பாலான தொற்று லேசானதாக இருப்பதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சியின் போது அவர் கூறுகையில், 

நகரில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாங்கள் அதைக் கண்காணித்து வருகிறோம். கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஆனால் தற்போது வரும் கரோனா தொற்று லேசானவை, பீதியடையத் தேவையில்லை.

சுதந்திர அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" கொண்டாடப்பட்டு வருகிறது. 115 அடி உயரம் கொண்ட 500வது மூவர்ணக் கொடியை கேஜரிவால் செவ்வாயன்று ஏற்றினார். 

இலவசங்கள் குறித்த பொதுநல மனுவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இலவசக் கல்வி, இலவச சிகிச்சை அளிப்பது இலவசம் அல்ல.. அது அரசின் கடமை. ரூ. 10,000 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்வதும், வரிகளைத் தள்ளுபடி செய்வதும் தான் இலவசம் என்று அவர் கூறினார்.

இதுதவிர தேர்தல் ஆணையத்திடமிருந்து கோவாவில் தனது கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்துள்ளதாகவும் அவர் அறிவித்தார். தில்லி மற்றும் பஞ்சாபைத் தொடர்ந்து ஆம் ஆத்மி இப்போது கோவாவிலும் மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.