தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வடக்கு வஜிரிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பாகிஸ்தான் வீரர்கள் பலி

கைபர் பக்துன்க்வாஸ் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள மீர் அலி பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். 

News image
Updated On :9 ஆகஸ்ட் 2022, 7:07 am

கைபர் பக்துன்க்வாஸ் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள மீர் அலி பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். 

இண்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ்(ஐஎஸ்பிஆர்) வெளியிட்ட அறிக்கையின்படி, 

தாக்குதலை நடத்திய தற்கொலை படையினரைக் கையாளுபவர்கள் மற்றும் உதவியாளர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிக்க புலனாய்வு அமைப்புகள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. 

பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை ஒழிப்பதில் பாகிஸ்தான் ராணுவம் உறுதியாக உள்ளது. துணிச்சலான வீரர்களின் தியாகங்களுக்காக கட்டாயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஐஎஸ்பிஆர் தெரிவித்துள்ளது. 

வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடியினர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல் மற்றும் பயங்கரவாதிகளுடன் மோதல்கள் சமீப காலமாக அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. 

ஜூலை 4 அன்று அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியதில் 10 பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர். 

மிராலியில் இருந்து மாவட்டத் தலைமையகமான மிரம்ஷாவுக்கு சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்தான். 

அதேபோன்று மே 30 அன்று, ரஸ்மாக் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் மற்றொரு கான்வாய் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற தற்கொலைப்படை குண்டுதாறி தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் மற்றும் 2 குழந்தைகள் காயமடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.