தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ரிலையன்ஸ் நிறுவனத்தில் அம்பானி பெறும் ஊதியம் எவ்வளவு? ஆச்சரியம் தரும் ஆண்டறிக்கை

இந்திய கோடீஸ்வரர்களில் முன்னணியில் இருக்கும் முகேஷ் அம்பானி, இரண்டாவது ஆண்டாக கடந்த நிதியாண்டிலும் தனக்கு மாதச் சம்பளம் வேண்டாம் என்று அறிவித்துவிட்டதாக ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

News image

ரிலையன்ஸ் நிறுவனத்தில் அம்பானி பெறும் ஊதியம் எவ்வளவு? ஆச்சரியம் தரும் ஆண்டறிக்கை

Updated On :8 ஆகஸ்ட் 2022, 8:20 am


புது தில்லி: இந்திய கோடீஸ்வரர்களில் முன்னணியில் இருக்கும் முகேஷ் அம்பானி, இரண்டாவது ஆண்டாக கடந்த நிதியாண்டிலும் தனக்கு மாதச் சம்பளம் வேண்டாம் என்று அறிவித்துவிட்டதாக ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

அதாவது, ரிலையன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த 2020- 2021ஆம் நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையில், முகேஷ் அம்பானியின் ஊதியம் என்ற இடத்தில் இல்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் நிர்வாகி மற்றும் மேலாண் இயக்குநர் முகேஷ் அம்பானி, கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்ட பல்வேறு இழப்புகளை ஈடுகட்டும் வகையில், தாமாக முன் வந்து, தனக்கு மாத ஊதியம் வேண்டாம் என்று அறிவித்திருந்தார். அந்த வகையில் அவர் 2021 - 22ஆம் நிதியாண்டிலும் தனது ஊதியத்தை விட்டுக் கொடுத்துள்ளார்.

இவ்விரு நிதியாண்டுகளிலும் முகேஷ் அம்பானி, மாத சலுகைப் படிகள் உள்ளிட்ட எதையும் பெறவில்லை. மேலும், தான் நிறுவனத்தின் நிர்வாகி மற்றும் மேலாண் இயக்குநராக பணியாற்றுவதற்காக எந்த ஊதியத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை.

கடந்த 11 ஆண்டுகளாக தனக்கு ஊதிய உயர்வை செய்து கொள்ளாமல், தொடர்ந்து 11 ஆண்டுகளாக வெறும்  ரூ.15 கோடியை மட்டுமே ஊதியமாகப் பெற்று வந்தார் முகேஷ் அம்பானி. இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த ஊதியத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டார்.

இதே நிறுவனத்தில் பணியாற்றும் இவரது உறவினர்களான நிகில் மற்றும் ஹைதல் மேஸ்வானி ஆகியோருக்கான ஊதியமும் மாற்றம் செய்யப்படாமல் ரூ.24 கோடியாகவே உள்ளது. ஆனால் ரூ.17.28 கோடி தரகுத் தொகையாக சேர்க்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.