தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாலமும் இல்லை, பள்ளிக்கும் செல்ல வேண்டும்.. வேறு வழி

நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் சாலைகள், 8 வழிச் சாலைகள், தேசிய நெடுங்சாலைகள் என்று நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதாக நாள்தோறும் செய்திகளைப் படிக்கிறோம்.

News image

மகாராஷ்டிர மாநிலத்தில் பாலம் இல்லாததால் ஆற்றைக் கடக்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்

Updated On :5 ஆகஸ்ட் 2022, 12:33 pm


நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் சாலைகள், 8 வழிச் சாலைகள், தேசிய நெடுங்சாலைகள் என்று நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதாக நாள்தோறும் செய்திகளைப் படிக்கிறோம்.

ஆனால், இன்னமும் பல கிராமங்கள், இந்த நாட்டுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் வழியில்லாமல், போக்கிடமும் இல்லாமல், போக வர வழியும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதும் இன்னமும் இருந்துகொண்டுதானிருக்கிறது.

அதுபோன்ற எண்ணற்றப் பகுதிகளில் தற்போது ஊடகத்தின் வெளிச்சம் பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தின் பெத் தாலுகாவிலிருக்கும் ஒரு கிராமத்துக்கு சாலையோ, பாலமோ இல்லாமல், நாள்தோறும் ஆற்றைக் கடந்துதான் வெளியே செல்லும் நிலையில் உள்ளனர்.

பள்ளிச் செல்லும் குழந்தைகளின் நிலைமையோ பரிதாபம். அவர்களது ஆடைகளும் நீரில் நனையாமல், ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் நாள்தோறும் பள்ளிக்குச் சென்று வருவதே மிகப்பெரிய சாதனைதான்.

பள்ளிச் செல்லும் பிள்ளைகளுக்கு அந்த ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் நாள்தோறும் உதவி வருகிறார்கள். ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு பிள்ளைகளை பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் மிகப்பெரும் பணியை அவர்களை மேற்கொள்கிறார்கள். பள்ளிச் செல்ல வேண்டும் என்றால் இது ஒன்று மட்டுமே வழி என்கிறார்கள் கிராம மக்கள்.

ஏராளமான பிள்ளைகளின் பெற்றோர்களும் பிள்ளைகளை தங்களது தோளில் சுமந்து ஆற்றைக் கடந்து அக்கரையில் விட்டுவிடுகிறார்கள். பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் இப்படித்தான் பிள்ளைகள் ஆற்றைக் கடக்கிறார்கள்.

ஆறும் ஆழமாக இருக்கிறது. பிள்ளைகளும் பள்ளிச் செல்ல வேண்டுமே. அதனால்தான் நாங்களே தோளில் சுமந்து கொண்டுச் செல்கிறோம். மாவட்ட நிர்வாகத்திடம் பாலம் கட்டித் தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம் என்கிறார்கள்.

மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளம் அடித்துக் கொண்டு போகும் போது அது தேர்வாக இருந்தாலும் கூட பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடியாது. அப்போது ஒரு மாத காலத்துக்கு மேல் அவர்கள் கல்வி பாதிக்கப்படும்.

பல ஆண்டுகளாக நாங்கள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாலையோ பாலமோ இதுவரை போடப்படவில்லை. இப்பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்களோ, தங்களது தேர்தல் சுற்றுப் பயணங்கள் நிறைவு பெற்றதும் எங்களையும் மறந்துவிடுகிறார்கள் என்கிறார்கள் மக்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.