குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

பைக் சாவிக்காக கையை வெட்டியை தந்தை: ரத்த வெள்ளத்தில் இறந்துபோன மகன்

மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ பகுதியில், மோட்டார்சைக்கிள் சாவிக்காக, தனது மகனின் கையை தந்தை கோடாரியால் வெட்ட, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துபோனார் 21 வயது மகன்.

News image
ரத்த வெள்ளத்தில் இறந்துபோன மகன்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:59 am

PTI


தாமோ: மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ பகுதியில், மோட்டார்சைக்கிள் சாவிக்காக, தனது மகனின் கையை தந்தை கோடாரியால் வெட்ட, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துபோனார் 21 வயது மகன்.

இந்த விவகாரம் வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது. மோட்டி பட்டேல் (51) என்பவரும் அவரது மூத்த மகன் ராம் கிசானும் (24), வெளியே செல்வதற்காக இளைய மகனும், பலியான நபருமான சந்தோஷ் படேலிடம் இருசக்கர வாகனத்தின் சாவியைக் கேட்டுள்ளனர். ஆனால், சாவியைக் கொடுக்க சந்தோஷ் மறுத்துவிட்டதால், மோட்டியும் ராமும் சந்தோஷை தாக்கியுள்ளனர்.

ஆத்திரம் தலைக்கேறியதில், மோட்டி, தனது மகனின் கையை ஒரு கட்டை மீது வைத்து, கோடாரியால் வெட்டியதில், கை துண்டானது.

துண்டான கை மற்றும் கோடாரியுடன் அருகிலிருந்த காவல்நிலையத்தில் சரணடைந்தார் மோட்டி. சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், உடனடியாக போபாய் கிராமத்துக்குச் சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தோழை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கும் பிறகு ஜபல்பூரில் உள்ள மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ரத்த இழப்பால் சந்தோஷ் மரணமடைந்துவிட்டார். இதையடுத்து மோட்டி மற்றும் ராம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.