தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

30 ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் இந்தியா வருகை

தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் மத ஒடுக்குமுறை அதிகரித்து வருவதால், குழந்தைகள் உள்பட 30 ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் புதன்கிழமை தில்லிக்கு வர உள்ளனர். 

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 7:59 am

தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் மத ஒடுக்குமுறை அதிகரித்து வருவதால், குழந்தைகள் உள்பட 30 ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் புதன்கிழமை தில்லிக்கு வர உள்ளனர். 

காம் ஏர் மூலம் இயக்கப்படும் காபூலில் இருந்து திட்டமிடப்படாத வணிக விமானம் ஒன்று தில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர உள்ளது. அவர்களின் வருகைக்குப் பிறகு முழுக் குழுவும் தேசிய தலைநகர் திலக் நகரில் உள்ள குருத்வாரா ஸ்ரீ குரு அஜ்ன் தேவ்க்குச் செல்வார்கள் என்று ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது. 

ஆப்கானில் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு, அங்குள்ள சீக்கிய சமூகம் உள்பட மத சிறுபான்மையினர் பலமுறை வன்முறைக்கு இலக்காகி வருகின்றனர். 

ஜூலை 14 அன்று 21 ஆப்கானிஸ்தான் கீக்கியர்கள் காபூலில் இருந்து புது தில்லிக்கு மிகப்பெரிய தனியார் ஆப்கானிய விமான நிறுவனமான காம் ஏர் மூலம் வெளியேற்றப்பட்டனர். 

கடந்த ஒரு மாதத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து 32 ஆப்கன் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மறுவாழ்வு பெற விரும்பும் சட்டப்பூர்வ நபர்களுக்கும் எஸ்ஜிபிசி உதவி வழங்கி வருகிறது. அவர்கள் உலக பஞ்சாபி அமைப்பு, சோப்தி அறக்கட்டளை மற்றும் பிற சமூக அமைப்புகளால் புனர்வாழ்வளிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.