தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மூன்று முறை விற்கப்பட்டு, பல முறை வன்கொடுமைக்குள்ளாகி.. தற்போது புதிய அவதாரம்

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் மூன்று முறை விற்கப்பட்டு, பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, தற்போது புதிய வாழ்க்கையில் கல்லூரி மாணவியை அடியெடுத்து வைத்துள்ளார்.

News image

மூன்று முறை விற்கப்பட்டு, பல முறை வன்கொடுமைக்குள்ளாகி.. தற்போது புதிய அவதாரம்

Updated On :2 ஆகஸ்ட் 2022, 9:26 am


கொல்கத்தா: சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவர்களுக்காக வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கு நேரிடும் அபாயங்களுக்கு மிகப்பெரிய உதாரணமாக மாறியுள்ளார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் மூன்று முறை விற்கப்பட்டு, பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, தற்போது புதிய வாழ்க்கையில் கல்லூரி மாணவியாக அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரங்களை ஒரு சில வரிகளில் முடித்துவிடலாம். ஆனால், அதனால் ஏற்பட்ட வலிகளை..

குற்றச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிஐடி காவல்துறையினர் கூறுகையில், கடந்த நான்கு மாதங்களில், அப்பெண், மனிதர்களைக் கடத்தும் வெவ்வேறு கும்பலிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளார். அவர்கள் மூலம் ஏராளமானோர் பாலியல் வன்கொடுமை செய்து, அப்பெண்ணை விட 30 வயது அதிகம் கொண்ட நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து அங்கிருந்து தப்பி வந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலர் உள்பட 6 பேர் பிகார், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களிலிருந்து கைது செய்யப்பட்டனர். 22 வயதாகும் இப்பெண்ணுக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.

இந்த கொடூரப் பயணம், 7 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளியில் இந்தப் பெண் படித்துக் கொண்டிருந்தபோது சமூக வலைத்தளத்தில் பிகாரைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேறியபோது தொடங்கியது.  அதன்பிறகு பலரிடம் விற்கப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி, மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் மீட்டுள்ளனர். 

தொடர் சிகிச்சையின் பயனாக அவர் குணமாகி, தனக்கு நடந்த அநீதியை வெளியே சொல்ல குற்றவாளிகள் சிறைக் கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோதே, அப்பெண் தனது பள்ளிக் கல்வியை நிறைவு செய்து கல்லூரிக்குள் நுழைந்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.