டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியாவில் பணிபுரியும் விமானிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தொழில்துறையில் உள்ள பெரும்பாலான விமான நிறுவனங்கள், விமானிகள் பணிபுரியும் வயது 65 வரை அனுமதிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி ஏர் இந்தியா தனது எதிர்கால விரிவாக்கத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு விமானிகளை 65 வயது வரை பணிபுரிய அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஜூலை 29 தேதி வெளியிட்ட அறிக்கையில்,
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிகபட்ச வயதான 65 வயது வரை விமானிகள் பணிபுரிய அனுமதித்துள்ளது. இதற்கு முன்னதாக ஏர் இந்தியாவில் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய, தற்போதைய பயிற்சி பெற்ற விமானிகளை ஓய்வுக்குப் பிறகு, ஒப்பந்த அடிப்படையில் 65 வயது வரை நீட்டிக்க புதிய ஒப்பந்தம் போடப்படும் என்றும், அந்த ஒப்பந்தம் குறைந்தது 5 ஆண்டுகள் அவர்கள் பணியில் நீட்டிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: ‘பரந்தூர் விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும்’: முதல்வர் ஸ்டாலின்
இந்த ஒப்பந்தம் செயல்படுத்துவதற்கு முன்பு ஓய்வுபெறும் விமானிகளின் தகுதியை ஆய்வு செய்ய மனிதவளத்துறை, செயல்பாட்டுத் துறை மற்றும் விமானப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். ஒழுக்கம், விமானப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக விமானிகளின் கடந்தகால பதிவுகளை மதிப்பாய்வு செய்து, அதன் அடிப்படையில் விமானிகள் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
58 வயதில் ஓய்வு பெற்ற பின்னர் 5 ஆண்டுகள் முதல்கட்ட பணி நீட்டிப்பு ஒப்பந்தம் செய்யப்படும். அதில் திருப்திகரமான சேவை இருந்தால், அவர்களின் விருப்பத்தின் பேரில் ஒப்பந்தம் 65 வயது வரை நீட்டிக்கப்படும் என்று ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


