குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

அமெரிக்கா வரை சென்ற குஜராத் தேர்வு முறைகேடு: இம்முறை ஐஇஎல்டிஎஸ் தேர்வு

அமெரிக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், குஜராத் மாநிலம் மேஹ்சனா மாவட்ட அதிகாரிகள், ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறதா என்று விசாரணையைத்தொடங்கியுள்ளனர்.

News image
அமெரிக்கா வரை சென்ற குஜராத் தேர்வு முறைகேடு: இம்முறை ஐஇஎல்டிஎஸ் தேர்வு
Updated On :1 பிப்ரவரி 2024, 9:57 am

PTI


ஆமதாபாத்: அமெரிக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், குஜராத் மாநிலம் மேஹ்சனா மாவட்ட அதிகாரிகள், ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறதா என்று விசாரணையைத்தொடங்கியுள்ளனர்.

ஆங்கில மொழி திறனறியும் தேர்வான ஐஇஎல்டிஎஸ் தேர்வில், தகுதியற்ற இளைஞர்கள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதாகக் கிடைத்த புகாரின் கீழ் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் கனடாவில் உள்ள கல்லூரிகளில் சேர்க்கை பெற்று பிறகு அவர்கள் அமெரிக்காவுக்கு கடத்தப்படும் அபாயமிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியிருக்கும் சிறப்புப் விசாரணைக் குழுவினர், தேர்வுகள் வெளிப்படையாக நடத்தப்படவில்லை என்றும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த தேர்வின்போது, தேர்வறையில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அணைத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அவர்களிடம் நீதிபதிகள் விசாரித்தபோது, அவர்களால் ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியாமல் போனது. அவர்களுக்கு ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு உதவி செய்யப்பட்டதும், விசாரணையில் அவர்கள் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் 6.5 முதல் 7 வரை மதிப்பெண் புள்ளிகள் பெற்றிருந்ததும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.