ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும்; உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல; அமித் ஷா

நாட்டில், ஆங்கில மொழிக்கு மாற்றாக ஹிந்தி மொழியை ஏற்க வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

News image

ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும்; உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல; அமித் ஷா

Updated On :8 ஏப்ரல் 2022, 11:22 am


புது தில்லி: நாட்டில், ஆங்கில மொழிக்கு மாற்றாக ஹிந்தி மொழியை ஏற்க வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அலுவல் மொழி ஆணையத்தின் 37வது கூட்டத்தில் பேசிய அமித் ஷா இவ்வாறு கூறியிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் அலுவல் மற்றும் மத்திய அரசு நடத்தும் நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பு மொழியாக ஹிந்தியை அறிவித்துள்ளார். இதனால், ஹிந்தி மொழியின் முக்கியத்துவம் நிச்சயம் அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பேசிய அமித் ஷா, மத்திய அரசு வகுக்கும் 70 சதவீத கொள்கைகள் தற்போது ஹிந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

மத்திய அரசின் அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒற்றுமையை அதிகரிப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றும் நேரம் வந்துவிட்டது. எனவே, ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும், உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள பேசும் மொழிதான் இந்திய நாட்டின் மொழி என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.