தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

உ.பி.யில் நொறுக்குத்தீனி வாங்கிச் சாப்பிட்ட 3 சகோதரிகள் பலி

சந்தையில் நொறுக்குத்தீனி வாங்கிச் சாப்பிட்ட 3 சகோதரிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
உ.பி.யில் நொறுக்குத்தீனி வாங்கிச் சாப்பிட்ட 3 சகோதரிகள் பலி
Updated On :28 ஜனவரி 2024, 4:23 am

ANI


ரேபரேலி: சந்தையில் நொறுக்குத்தீனி வாங்கிச் சாப்பிட்ட 3 சகோதரிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் மிர்ஸா இனயதுல்லாப்பூர் பட்டி கிராமத்தில் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பிஹு (4), விதி(6), வைஷ்ணவி (8) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்களது தந்தை நவீன்குமார் இது பற்றி கூறுகையில், ஜமுனாநகர் சந்தைக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்ற சகோதரிகள் மூவரும், அங்கு பொரி உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி வந்து சாப்பிட்டுள்ளனர். அப்போதிலிருந்து அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலியாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அந்த கிராமத்துக்குச் சென்று, சிறுமிகள் சாப்பிட்ட தின்பண்டத்தின் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுமிகளின் உடலை உடற்கூராய்வு செய்தும், அதில் உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படவல்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.