பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 531 பேருக்கு டெங்கு

தில்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 531 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெற்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News image

தில்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 531 பேருக்கு டெங்கு

Updated On :1 நவம்பர் 2021, 10:12 am


புது தில்லி: தில்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 531 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெற்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சல் பாதித்து 6 பேர் பலியாகியிருப்பதாகவும் தில்லி மாநகராட்சி கூறியுள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், தில்லியில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 1,537 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.