வங்கதேசத்தில் ஜூன் 6 வரை ஊரடங்கு நீட்டிப்பு
கரோனா பரவலைத் தொடர்ந்து வங்கதேசத்தில் ஜூன் 6-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.


கரோனா பரவலைத் தொடர்ந்து வங்கதேசத்தில் ஜூன் 6-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனாவின் இரண்டாம் அலை நிகழ்ந்து வருகின்றது. பல மாநிலங்களில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, வங்கதேசத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தி அமைச்சரவை பிரிவு ஞாயிற்றுக்கிழமை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக நாடு தழுவிய பொதுமுடக்கம் மே 24 முதல் மே 30 வரை நீட்டித்தது, ஆனால் நீண்ட பொது போக்குவரத்து சேவைகளுக்கான கட்டுப்பாடுகளை கடந்த மாத தொடக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டன.
சமீப நாட்களாக புதிய வழக்குகள் மற்றும் இறப்புக்கள் அதிகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின்படி ஞாயிற்றுக்கிழமை 1,444 புதிய வழக்குகள் மற்றும் 34 இறப்புகள் பதிவாகியுள்ளது, இது ஒட்டுமொத்த தொற்று பாதிப்பு 798,830 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 12,583 ஆகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...