நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கரோனா 2-ம் அலைக்கு பிரதமர் மோடியே காரணம்: ராகுல் காந்தி

நாட்டில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரடியாக தாக்கிப் பேசியுள்ளார்.

News image
கரோனா 2-ம் அலைக்கு பிரதமர் மோடியே காரணம்: ராகுல் காந்தி
Updated On :27 ஜனவரி 2024, 8:19 pm

IANS


புது தில்லி: நாட்டில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரடியாக தாக்கிப் பேசியுள்ளார்.

நாட்டில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவது குறித்து மத்திய அரசை குற்றம்சாட்டியிருக்கும் ராகுல் காந்தி, நாட்டில் தற்போது கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் வெற்றி பெற கரோனா தடுப்பூசிதான் ஒரே வழி.

மத்திய அரசோ, நாட்டில் கரோனா பலி எண்ணிக்கையை குறைத்துக் காட்டி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரச்னையே கரோனா தொற்றை புரிந்து கொள்ளாத மத்திய அரசும் பிரதமரும்தான். கடந்த ஆண்டே கரோனா பெருந்தொற்றுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்று நான் வலியுறுத்தினேன். கரோனா தடுப்பூசிதான் ஒரே நிரந்தர தீர்வு. தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படாவிட்டால், இந்த வைரஸ் அடுத்தடுத்து உருமாறிக் கொண்டு 3, 4 என அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கும் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.