பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தேவசம்போர்டின் வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியானது

கரோனா பெருந்தொற்று காரணமாக திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தால், ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்தது.

News image

தேவசம்போர்டின் வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியானது

Updated On :28 மே 2021, 5:47 am

திருவனந்தபுரம்: கரோனா பெருந்தொற்று காரணமாக திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தால், ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்தது.

சபரிமலை உள்பட கேரள மாநிலத்தின் தென் மாவட்டங்களில் உள்ள கோயில்கள் அனைத்தும் திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்தக் கோயில்களிலிருந்து கிடைக்கும் வருவாய் கொண்டு தான் திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஊதியம், ஓய்வூதியம் என ரூ.40 கோடி அளவுக்கு செலவு செய்யப்படுகிறது.

ஆனால், தற்போது கோயில்கள் மூலம் வரும் வருவாய் இல்லாததால், தங்களது செலவுகளை மேற்கொள்ள மாநில அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.

இந்த கோயில்களின் வருவாய் ரூ.261 கோடியிலிருந்து தற்போது ரூ.21 கோடியாகக் குறைந்துள்ளது.  2020-ஆம் ஆண்டிலேயே சபரிமலையில் பக்தர்களின் அனுமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால்  கோயில் மூலம் கிடைக்கும் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.