நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கரோனா பாதிக்காத தாய்க்கு தொற்று பாதித்த குழந்தை: பிறந்ததும் எடுத்த சோதனையில் அதிர்ச்சி

கரோனா  பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்று தாய்க்கு முடிவு வந்த நிலையில், அவருக்குப் பிறந்த குழந்தை பிறக்கும் போதே தொற்று பாதிப்புடன் இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.

News image
கரோனா பாதிக்காத தாய்க்கு தொற்று பாதித்த குழந்தை: பிறந்ததும் எடுத்த சோதனையில் அதிர்ச்சி
Updated On :27 ஜனவரி 2024, 8:19 pm

IANS


வாராணசி: கரோனா  பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்று தாய்க்கு முடிவு வந்த நிலையில், அவருக்குப் பிறந்த குழந்தை பிறக்கும் போதே தொற்று பாதிப்புடன் இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.

வாராணசியில் உள்ள எஸ்எஸ்எல் மருத்துவமனையில் மே 24-ஆம் தேதி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் தொற்று இல்லை என்று முடிவு வெளியான நிலையில், மே 25-ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்ததுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், குழந்தைக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிக்காத கர்ப்பிணிக்கு, கரோனா பாதித்த குழந்தை பிறந்திருப்பது இந்த பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

குழந்தையும், தாயும் நலமாக இருக்கிறார்கள். ஒரு சில நாள்களுக்குப் பிறகு இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.