பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கரோனா பாதிக்காத தாய்க்கு தொற்று பாதித்த குழந்தை: பிறந்ததும் எடுத்த சோதனையில் அதிர்ச்சி

கரோனா  பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்று தாய்க்கு முடிவு வந்த நிலையில், அவருக்குப் பிறந்த குழந்தை பிறக்கும் போதே தொற்று பாதிப்புடன் இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.

News image

கரோனா பாதிக்காத தாய்க்கு தொற்று பாதித்த குழந்தை: பிறந்ததும் எடுத்த சோதனையில் அதிர்ச்சி

Updated On :28 மே 2021, 9:10 am


வாராணசி: கரோனா  பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்று தாய்க்கு முடிவு வந்த நிலையில், அவருக்குப் பிறந்த குழந்தை பிறக்கும் போதே தொற்று பாதிப்புடன் இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.

வாராணசியில் உள்ள எஸ்எஸ்எல் மருத்துவமனையில் மே 24-ஆம் தேதி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் தொற்று இல்லை என்று முடிவு வெளியான நிலையில், மே 25-ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்ததுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், குழந்தைக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிக்காத கர்ப்பிணிக்கு, கரோனா பாதித்த குழந்தை பிறந்திருப்பது இந்த பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

குழந்தையும், தாயும் நலமாக இருக்கிறார்கள். ஒரு சில நாள்களுக்குப் பிறகு இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.