பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உ.பி.: மணமேடையில் மாரடைப்பால் மணமகள் மரணம்; தங்கையுடன் திருமணம்

உத்தரப்பிரதேச மாநிலம் எடவாஹ் மாவட்டத்தில், திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு மணமேடையில் மணமகள் மரணமடைய, அவரது தங்கையுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

News image

உ.பி.: மணமேடையில் மாரடைப்பால் மணமகள் மரணம்; தங்கையுடன் திருமணம்

Updated On :28 மே 2021, 12:40 pm


உத்தரப்பிரதேச மாநிலம் எடவாஹ் மாவட்டத்தில், திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு மணமேடையில் மணமகள் மரணமடைய, அவரது தங்கையுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

எடவாஹ் மாவட்டம் சமஸ்பூர் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மணமேடைக்கு மணமக்கள் இருவரும் வந்து மாலைகளை மாற்றி, திருமணச் சடங்குகள் நடைபெற்று முடிந்து மங்கல நாண் அணிவிக்கப்பட இருந்த நிலையில், திடீரென மணமகள் மயங்கி விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த குடும்பத்தினர் உடனடியான மருத்துவரை வரவழைத்து, மணமகளின் உடல்நிலையை சோதித்ததில், அவர் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர் கூறிவிட்டார்.

திருமண வீடு துக்க வீடானது. யாருக்கும் என்னசெய்வது என்று தெரியவில்லை. இந்த நிலையில், இரு வீட்டாரும் ஒரு மனதாக, மணமகளின் தங்கையுடன் திருமணத்தை செய்விக்க முடிவு எடுத்தனர். இதற்கு மணமகன் - மணமகள் இருவரும் ஒப்புக் கொள்ள, மணமகளின் உடல் ஒரு அறையில் வைக்கப்பட்டது. மற்றொரு அறையில் திருமணம் நடைபெற்றது.

இதில் மணமகளின் குடும்பத்தாரின் மனநிலையை நினைத்து, வந்திருந்தவர்கள் பலரும் கண் கலங்கினர். ஓர் அறையில் ஒரு மகள் பிணமாகக் கிடக்க, மற்றொரு அறையில், மற்றொரு மகள் திருமணக் கோலத்தில் இருப்பதைப் பார்த்து இருவேறு மனநிலையில் தவித்ததைப் பார்த்து பலரும் கலங்கி நின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.