ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஒருவர் சரண்

ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த மோதலில் மூன்று அல்-பத்ர் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் சரணடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஒருவர் சரண்

Updated On :6 மே 2021, 5:48 am

ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த மோதலில் மூன்று அல்-பத்ர் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் சரணடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் கனிகம் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின்படி, சம்பவ இடத்தை சுற்றி வளைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். 

இந்த நடவடிக்கையின் போது தீவிரவாதிகள் சரணடைய வாய்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து ஒருவர் சரணடைந்தார். மேலும் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் துப்பாக்கி நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் டேனிஷ் மிர், முகமது உமர் பட் - கஜாபோரா சோபியானில் வசிப்பவர்கள் என்றும், மேலும் ஒருவர் சோபியானின் ராபன் பகுதியில் வசிக்கும் ஜைத் பஷீர் ரேஷி என செய்தித் தொடர்பாளர் அடையாளம் காட்டினார்.

காவல்துறையினரின் தகவலின்படி அவர்கள் அல்-பத்ர் பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று தெரியவந்தது. 

மேலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.