/

காவல்துறையினருக்கு விடுமுறை ரத்து: பிகார் அரசு அதிரடி

கரோனா நெருக்கடியைக் கருத்தில்கொண்டு அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்து பிகார் அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

News image

காவல்துறையினருக்கு விடுமுறை ரத்து

Updated On :6 மே 2021, 9:35 am

கரோனா நெருக்கடியைக் கருத்தில்கொண்டு அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்து பிகார் அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக பிகார் காவல் தலைமையகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 

மாநிலம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், அவற்றை கட்டாயம் கண்காணிக்க காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கரோனா நிலைமையைக் கருத்தில்கொண்டு, அவசர தேவைகளுக்கு மட்டும் சூழ்நிலையைக் கருதி விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று தலைமையகம் தெரிவித்துள்ளது. 

தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநில அரசு மே 15-ம் தேதி வரை முழு பொதுமுடக்கம் விதித்துள்ளது. 

இதனிடையே நேற்று ஒரேநாளில் 14,836 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. 169 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.