/

மகாராஷ்டிரத்தில் தீ விபத்து: 4 பேர் பலி, 3 பேர் காயம்

மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் வீட்டோடு சேர்ந்த கடையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர் மற்றும் மூவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image

மகாராஷ்டிரத்தில் தீ விபத்து: 4 பேர் பலி, 3 பேர் காயம்

Updated On :29 மார்ச் 2021, 6:05 am

மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் வீட்டோடு சேர்ந்த கடையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர் மற்றும் மூவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மொகதா தாலுகாவின் கீழ் உள்ள பிரம்மங்காவ்ன் கிராமத்தில் வசித்து வந்தனர்.

இந்த தீ விபத்தில் கடை உரிமையாளரின் மனைவி, தாய் மற்றும் 10 மற்றும் 15 வயதுடைய இரண்டு குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்ததாக மொகடா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மின்கசிவு காரணமாகத் தீப்பிடித்ததாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடைபெற்ற ஒரு மணி நேரத்தில் தீ மளமளவென வீட்டிற்குள் பரவியது. 

உயிரிழந்தவர்கள் கங்குபாய் மோல் (78), துவாரகா அனந்தா மோல் (46), பல்லவி மோல் (15), கிருஷ்ணா மோல் (10) என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.