தெலங்கானாவில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனா பாதிப்பு 400ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3.04 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 431 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,676 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,352 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவக் கல்லூரிகளைத் தவிர்த்து அனைத்து கல்வி நிறுவனங்களையும் தற்காலிகமாக மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 23-ம் தேதியன்று 70,280 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை ஒட்டுமொத்தமாக 97.89 லட்சம் சோதனைகள் அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அதேசமயம் மீட்பு விகிதம் 98.34 சதவீதமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


