/

குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 1,128 தொழிலாளர்கள் பலி

குஜராத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் சுமார் 1,128 தொழிலாளர்கள் இறந்துள்ளதாக மாநில சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

News image

குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 1,128 தொழிலாளர்கள் பலி 

Updated On :22 மார்ச் 2021, 11:15 am

குஜராத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் சுமார் 1,128 தொழிலாளர்கள் இறந்துள்ளதாக மாநில சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

மாநில சட்டமன்ற கேள்வி நேரத்தின்போது அமைச்சர் திலீப் தாக்கோர் கூறியதாவது, 

மாநிலத்தில் 35.30 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அதில், 28.65 லட்சம் பேர் விவசாயத் துறையிலும், 6.65 லட்சம் பேர் கட்டுமானத் துறையிலும் உள்ளனர் என்று மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திலீப் தாக்கோர் தெரிவித்தார். 

கடந்த இரண்டு ஆண்டுகளில் விபத்துக்களில் இறந்த 1,128 தொழிலாளர்களில் 842 பேர் விவசாயத் துறையையும், 286 கட்டுமானத் துறையையும் சேர்ந்தவர்களாவர். 

அதிகபட்சமாக ஆனந்த் மாவட்டத்தில் 2.18 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களும், அகமதாபாத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்முறையாக இழப்பீடு வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தாகூர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.