அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கரோனா எதிரொலி: ஹோலி விற்பனையில் மந்தம்

நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஹோலிப் பண்டிகைக்காக வண்ணப் பொடிகள் உள்ளிட்டப் பொருள்களின் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

News image

கரோனா எதிரொலி: ஹோலி விற்பனையில் மந்தம்

Updated On :22 மார்ச் 2021, 8:04 am


லக்னௌ: நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஹோலிப் பண்டிகைக்காக வண்ணப் பொடிகள் உள்ளிட்டப் பொருள்களின் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

வரும் வாரத்தில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுவாக அதற்கு முந்தைய ஞாயிறுகளில் ஏராளமானோர் சந்தைகளுக்கு வந்து வண்ணப் பொடிகள் உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்வது வழக்கம்.

ஆனால், கரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஹோலிப் பண்டிகையை திட்டமிட்டபடி கொண்டாட முடியுமா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளதால், பலரும் சந்தைகளுக்கு வந்து வாங்குவதைக் குறைத்துக் கொண்டுள்ளனர்.

இது குறித்து ஹப்பூர் மொத்த விற்பனைச் சந்தை வியாபாரிகள் கூறுகையில், வழக்கமான அளவில் இல்லாமல் வண்ணப் பொடிகள், தண்ணீர் துப்பாக்கிகள் போன்றவற்றின் விற்பனை குறைந்துள்ளது.

பப்படம் விற்பனை செய்யும் வியாபாரி, இந்த ஆண்டும் விற்பனை மந்தமாகவே இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு விற்பனை குறைவுதான் என்கிறார்கள் சில வியாபாரிகள்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், ஹோலிக்கு முந்தைய ஞாயிறுகளில் பயங்கர கூட்டமாகக் காணப்படும் சந்தைகளில் இந்த ஆண்டு மிகக் குறைவான மக்களே காணப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.