வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உ.பி.யில் பெண், 2 குழந்தைகள் உயிருடன் எரித்துக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் தீ வைத்து உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
உ.பி.யில் பெண், 2 குழந்தைகள் உயிருடன் எரித்துக் கொலை
Updated On :27 ஜனவரி 2024, 7:38 pm

IANS

உத்தரப் பிரதேசத்தில் பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் தீ வைத்து உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கார்ப்பரேட்டர் ஜிதேந்திர யாதவின் மனைவி அர்ச்சனா (29), அவரது 5 வயது மகள் அக்ஷிதா மற்றும் 15 மாத மகன் ஹனு மீது வீட்டின் அருகில் வசிக்கும் அவனேஷ் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். 

அர்ச்சனா சமையலறையில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஜிதேந்திரா வீட்டின் மற்றொரு பகுதியிலிருந்தபோது அவளுடைய இரண்டு குழந்தைகளும் அவளுடன் அமர்ந்திருந்தனர்.

அப்போது, திடீரென்று அவனேஷ் சம்பவ இடத்திற்கு வந்து, அர்ச்சனாவையும் இரண்டு குழந்தைகளையும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டதும், ஜிதேந்திராவும், அக்கம்பக்கத்தினரும் மூவரையும் மீட்டு விரைந்து மருத்துவமனைக்குச் சென்றனர். பின்னர், காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

சிகிச்சை பலனின்றி குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர். மனைவி, கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார். 

குற்றம் சாட்டப்பட்டவர், பெண் கான்ஸ்டபிள் உஷாவின் கணவரான 25 வயதான அவனேஷ் பிரஜாபதி ஆவார். குற்றத்தைச் செய்த பின்னர் தப்பியோடும்போது நெடுஞ்சாலையில் வேகமாக வந்த வாகனம் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கான்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எரிக்கப்பட்டதற்கான உண்மை காரணத்தை காவல்துறை கண்காணிப்பாளர் கான்பூர் தேஹாத், கேசவ் குமார் சவுத்ரி விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.