திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

தில்லியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முதியவர்கள் ஆர்வம்

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதித்த 45 - 59 வயதுடையவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது.

News image

தில்லியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முதியவர்கள் ஆர்வம்

Updated On :1 மார்ச் 2021, 9:58 am

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதித்த 45 - 59 வயதுடையவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது.

இதையடுத்து, புது தில்லியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவமனைகளில் இன்று காலை முதலே ஏராளமான முதியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்தது.

அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புது தில்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலை முதலே ஏராளமான முதியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முதல் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இது குறித்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 95 வயது மூதாட்டி ராதா ராணி கூறுகையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு முற்றிலும் இயல்பாகவே இருக்கிறேன். எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.