பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கர்நாடகத்தில் ஜூலை 19 முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

கர்நாடகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஜூலை 19 முதல் தொடங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

News image

கர்நாடகத்தில் ஜூலை 19 முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

Updated On :28 ஜூன் 2021, 11:05 am

கர்நாடகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஜூலை 19 முதல் தொடங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடகத்திலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 10ஆம் வகுப்புக்கு நடத்தப்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தேர்வு நடத்துவது குறித்து உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர் சுரேஷ் குமார், ஜூலை 19 முதல் 22 வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் சுரேஷ் குமார் கூறியதாவது,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு நாள்கள் மட்டுமே நடைபெறவுள்ளது. ஜூலை 19 ஆம் தேதி முக்கிய பாடங்களுக்கும், ஜூலை 22ஆம் தேதி மொழிப்பாடங்களுக்கும் காலை 10.30 முதல் 1.30 வரை தேர்வு நடைபெறும்.

கரோனா காரணமாக சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு 48,000ஆக இருந்த தேர்வு அறைகள் 73,066ஆக மாற்றப்பட்டுள்ளது. ஒரு அறைக்கு 12 மாணவர்கள் வீதம் 8.76 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

தேர்வில் பணிபுரியவுள்ள ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்விற்கு வரும் மாணவர்களின் உடல்நலனை கவனிக்க ஒவ்வொரு மையத்திலும், மருத்துவர் உள்பட சுகாதாரத்துறையினர் பணியமர்த்தப்படவுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள கரோனா முகாம்களுக்கு சென்று தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.