கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மும்பை முன்னாள் காவல் அதிகாரிக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்

முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டின் அருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் தொடா்புடைய மும்பை காவல் முன்னாள் அதிகாரி பிரதீப் சா்மாவுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

News image

முன்னாள் காவல் அதிகாரி பிரதீப் சா்மா

Updated On :28 ஜூன் 2021, 9:23 am

மும்பை: தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டின் அருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் தொடா்புடைய மும்பை காவல்துறை முன்னாள் அதிகாரி பிரதீப் சா்மாவுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டின் அருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தொழிலதிபர் மன்சுக் ஹிரேன் கொலை வழக்கில் கடந்த ஜூன் 17ஆம் தேதி மும்பை முன்னாள் காவல் அதிகாரியும், சிவசேனை கட்சியை சேர்ந்த பிரதீப் சா்மா கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரதீப் சர்மா மற்றும் கொலையில் தொடர்புடைய சந்தோஷ் ஷெலாா், ஆனந்த் ஜாதவ் ஆகிய மூவருக்கும் ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகில் ஜெலட்டின் வெடிபொருளுடன் காா் நிறுத்திவைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படையினா் நடத்திய விசாரணையில் வெடிபொருளுடன் நிறுத்தப்பட்ட காா், தாணே பகுதியைச் சோ்ந்த மன்சுக் ஹிரேன் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. இவா் அடுத்த ஓரிரு நாட்களில் மா்மமான முறையில் இறந்தாா். இந்தச் சம்பவங்களில் குற்றப்பிரிவு அதிகாரியும் என்கவுன்ட்டா் நிபுணா் என்று அறியப்பட்டவருமான சச்சின் வஜே என்பவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

அதன் பின்னா், இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது. விசாரணையை தீவிரப்படுத்திய என்ஐஏ, இந்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரி சச்சின் வஜே உள்பட மேலும் சில காவலா்களுக்குத் தொடா்பு இருப்பதை உறுதி செய்தது.

அதனடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் சச்சின் வஜே, ரியாசுதீன் காஜி, சுனில் மானே ஆகியோரை என்ஐஏ கைதுசெய்தது. இவா்களைத் தவிர முன்னாள் காவலா் விநாயக் ஷிண்டே மற்றும் கிரிக்கெட் தரகா் நரேஷ் கோா் ஆகியோரையும் என்ஐஏ கைது செய்தது.

கடந்த ஜூன் 11-ஆம் தேதி இந்த வழக்கில் தொடா்புடையதாக மும்பையின் மாலாட் பகுதியிலிருந்து சந்தோஷ் ஷெலாா், ஆனந்த் ஜாதவ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். ஜூன் 17ஆம் தேதி பிரதீப் சர்மா கைது செய்யப்பட்டார்.

முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டின் அருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் மும்பை காவல்துறையைச் சோ்ந்த 5 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.