கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

8 மாநிலங்களில் 50 சதவீதம் பேருக்கு டெல்டா வகை கரோனா: மத்திய அரசு

நாட்டில் உள்ள 8 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2021, 11:24 am

நாட்டில் உள்ள 8 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை நாள்தோறும் குறைந்து வருவதையடுத்து, இன்றைய நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது,

நாட்டின் தற்போதைய குணமடைவோர் விகிதம் 96.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தின் நான்காவது வாரத்தில் 531 மாவட்டங்களில் 100க்கும் அதிகமானோர் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வந்தனர். 

ஜூன் 2வது வாரத்தில் 262 மாவட்டங்களில் பாதிப்பு பதிவான நிலையில், தற்போது 125 மாவட்டங்களில் மட்டுமே 100 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆந்திரம், தில்லி, ஹரியாணா, கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் டெல்டா வகை கரோனாவால் 50 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் பிரிட்டனில் உருமாறிய கரோனா கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது 4 வகையான உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

அதில், டெல்டா வகை கரோனா இந்திய ஆராய்ச்சியாளரால் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் தெரிவிக்கப்பட்டது. இதனால், பல நாடுகளில் டெல்டா வகை கரோனாவை கண்டறிந்து உறுதி செய்ய முடிந்ததாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.